Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வியாகுல மாதா ஜெபமாலை // ஏழு துயரங்களை தியானிக்கும் ஜெபமாலை // Our Lady of Sorrows / Dollars в хорошем качестве

வியாகுல மாதா ஜெபமாலை // ஏழு துயரங்களை தியானிக்கும் ஜெபமாலை // Our Lady of Sorrows / Dollars 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வியாகுல மாதா ஜெபமாலை // ஏழு துயரங்களை தியானிக்கும் ஜெபமாலை // Our Lady of Sorrows / Dollars

feast of September 15 Our Lady of Sorrows Dollars #rosary #novena #prayer From Mary we learn to surrender to God’s will in all things. From Mary, we learn to trust even when all hope seems gone. From Mary, we learn to love Christ, her Son and the Son of God. St. Pope John Paul II The 7 Sorrows Rosary of Mary leads us through the sorrows of Christ’s life. “Pray for us, O Virgin most sorrowful, that we may be made worthy of the promises of Christ.” We pray this Rosary to learn to suffer with love, as Mary, the Mother of Jesus, did. The 7 Sorrows Rosary leads us to understand our suffering, sins, and sorrows. Doing so helps us better live a life of joy in the Lord so that we can serve others like St. Bridget and Marie-Claire did. As we pray with Mary through her seven sorrows, we begin to feel empathy for her suffering, the suffering of her Son, our Savior, our neighbors, and our own. This Rosary can be prayed at any time, anywhere, in any season of life. We can even dedicate our prayer to the suffering of a friend, family member, ourselves, or the world. We pray this devotion when we need the guidance of the Blessed Virgin and when we need to remind ourselves of the joy that comes out of suffering in this life. It is also common to pray this Rosary on September 15th, the Feast Day of Our Lady of Sorrows. How to Pray: 7 Sorrows Rosary Time needed: 34 minutes நம் அன்னை, தன் அன்பு மகனின் பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார்கள். துணை மீட்பராக விளங்கிய நம் தாய், தன் மகனின் பாடுகளில் தனது மாசுமருவற்ற தூய இருதயத்தை அடித்து நொறுக்கி செயலிழக்க செய்வது போன்ற வேதனையை அனுபவித்தார். இவ்வாறு வானவனின் வார்த்தைக்கு 'ஆகட்டும்' என, தன்னைக் கையளித்த நாள் முதல் நம் தாய் அனுபவித்த வியாகுலங்கள் பற்பல. என்றாலும் நம் தாயாம் திருச்சபை அவற்றில் ஏழு வியாகுலன்களைப் பற்றி தியானிக்க அழைக்கிறது. நாமும் நம் அன்னையின் வியாகுலங்களை தியானிப்போம். தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் செபமாலையின் சிலுவையில்: சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! இதோ உமது காலடியில் தென்டனிட்டு விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப்பாதையில் அனுதாபப்பட்டு வேதனையுடன் உம்மைப் பின் சென்ற உம் தாயின் கண்ணீரை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஓ நல்ல இயேசுவே! உமது அன்னையின் கண்ணீர் எங்களுக்குக் கற்றுத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இதயத்தில் ஏற்று, இந்த மண்ணுலகில் உமது திருவுளம் நிறைவேறவும், விண்ணகத்தில் நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கத் தகுதியுள்ளவராகச் செய்தருளும். ஆமென். ஏழு மணி செப மன்றாட்டுக்கள்: முதல் வியாகுலம் - சிமியோனின் இறைவாக்கு. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது இதயத்தை ஓர் வாள் ஊடுருவும் என்று முன்னுரைத்த சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு, உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எங்கள் துன்பத் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்க அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.) இரண்டாம் வியாகுலம் குழந்தையுடன் எகிப்துக்கு தப்பி ஓடுதல். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது தாயானத் தூய கன்னி மரியா எகிப்து நாட்டுக்கு ஓடிப் போன போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எல்லா அகதிகள் மேலும், உம் மீது கொண்ட விசுவாசத்திற்காகத் துன்பத் துயரங்களையும், வேதனைகளையும் அனுபவிக்கும் அனைவர் மேலும் இரக்கமாயிரும். ( 1 பர, 7 அருள். 1 திரி.) மூன்றாம் வியாகுலம் - மூன்று நாள் இயேசு காணாமல் போதல். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! மூன்று நாள்களாக உம்மைக் காணாமல் உமது தாயானத் தூய கன்னி மரியா உம்மைத் தேடியலைந்த போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, உம்மை இழந்த ஆன்மாக்கள் அனைவரும் மீண்டும் உம்மைக் கண்டு மீட்படைய அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.) நான்காம் வியாகுலம் இயேசு சிலுவை சுமந்து செல்லுதல். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது வேதனை நிறைந்த சிலுவைப்பாதையில் நீர் நடந்து சென்ற போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நோயாலும், துன்பத் துயரங்களாலும் நாங்கள் வருந்தும் போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, சோதனைகளில் நாங்கள் விழுகின்ற போது நீரே வழியும், உயிரும், உண்மையும் என்பதை எங்களுக்குக் காட்ட அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.) ஐந்தாம் வியாகுலம் இயேசுவின் சிலுவை அடியில் அன்னை. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண வேதனைப்படும் போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, மரண வேளையில் துன்பப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிருந்து, எங்களது மரண வேளையில் எங்களை உமது கரங்களில் அன்போடு ஏற்றுக்கொள்ள அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.) ஆறாம் வியாகுலம் மாதாவின் மடியில் மரித்த மகன். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு உமது தாயின் மடியில் வளர்த்தப்பட்ட போது, அவர் சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களுடைய சக்திக்கு மேலானத் துன்பங்களை நீர் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும். ( 1 பர, 7 அருள். 1 திரி.) ஏழாம் வியாகுலம் - இயேசுவை அடக்கம் செய்த பின், அன்னை அனுபவித்த துயரம். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள அருள் புரிவீராக. இந்த நாட்களில் உம் சுரூபங்களில் வடியும் கண்ணீருக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

Comments