Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இந்தப் பாடலை கேட்டு உணர்ந்து துதித்தால் தீராத நோயெல்லாம் தீரும் | vallalar songs в хорошем качестве

இந்தப் பாடலை கேட்டு உணர்ந்து துதித்தால் தீராத நோயெல்லாம் தீரும் | vallalar songs 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இந்தப் பாடலை கேட்டு உணர்ந்து துதித்தால் தீராத நோயெல்லாம் தீரும் | vallalar songs

எண்ணத்திரங்கள் - இப்பதிகம் நோய் அதிகமுற்று எளிதில் தீராதபோது, மனத்தில் எண்ணியவற்றை ஆண்டவரிடம் விண்ணப்பிப்பதாம். முன் வினையினாலும், காம வேட்கையாலும், மல இருளினாலும் ஏற்படும் நோய்கள் நீங்க இறைவன் ஒன்றே வழி என்று விண்ணப்பிக்கும் பாடல். இப்பாடல்களை கேட்டு உணர்ந்து துதித்தால் தீராத நோய் எல்லாம் தீரும். பாடல் 1: எளியவனாகிய நான் உன் முன்னே என்ன சொல்லாப்போகின்றேன், பொல்லாத செருக்கும் கொடிய காம உணர்ச்சி நிறைந்த கல்மனமும் நன்மை சிறிதும் இல்லாத வெறிச் செயலும் உடையவனாகிய என் உடம்பில் ஏற்பட்டுள்ள பிணியை திருஒற்றியூரில் வாழும் பெருங்கருணையே நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 2: முற்பிறவியில் செய்த தீவினையால் உண்டானதோ, அல்லது நான் இப்பிறவியில் பிழை என்ன செய்தேனா தெரியவில்லை. பொன்னால் திரிக்கப்பட்டது போன்ற சடையையுடைய புண்ணியனே, என் நோயை அன்னையே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 3: இவ்வுலகில் உனையே போற்றுகின்ற நாயேனாகிய என்னை கொடுமையுடைய மனத்தினர்போல் வாட்டம் செய்யும் இக்கொடிய பிணியை எல்லார்க்கும் இறைவனாகிய என் அருமை அப்பா, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 4: நீங்காத மயக்கத்தை தருகின்ற உலகியல் துன்பத்தில் இருந்து விடுபட அறியாது உழல்கின்ற அறிவில்லாதவனாகிய என் உடல் நோயை, எருது கொடியை உடைய எங்கள் சிவனே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 5: பொய்யை மெய் என்று நினைத்து, காம மலஇருட்டு குழியில் விழுந்து உழலும் நல்லொழுக்க நெறியற்றவனாக இருக்கின்றேன். என்னைக் கலங்க செய்ய வந்த இக்கொடிய நோயை கரிய நிறத்தையுடைய மருந்தும் மணியுமாகிய என் ஐயா, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 6: இப்பெரிய மண்ணுலகில் துன்புறுவது போதாது என்று வாய்விட்டு அலறி வருந்துமாறு என்னுடலை பற்றி வருத்துகின்ற இக்கொடிய நோயை சிவந்த மானையும், மழுவையும் கைகளில் ஏந்தி நிற்கின்ற செல்வ சிவமே அம்மா, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 7: குற்றம் சேரும் தீய எண்ணங்களையே நெஞ்சாகக் கொண்டு பொல்லாத காம வேட்கையாகிய, கடல் ஆழத்தின் தரையை சேர்ந்து, துன்பக்கடலின் கரையை கடக்காதவனாய் இருக்கின்றேன். என் கொடிய நோயை மனம் கமழும் கொன்றை மலர் அணிந்த திரிந்த சடையுடையவனே, வானவர்களுக்கெல்லாம் அரசனாகிய நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 8: இம்மண்ணுலகில் எளிய மக்களைக் கண்டால் பெருமை பிதற்றும் பேதையேன் என் உடல்நோயை, கொத்தான பூக்களை அணிந்த கூந்தலை உடைய உமாதேவியை உடம்பில் ஒருபாகமாக கொண்ட இறைவனே, என் தந்தையே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 9: மான்போன்ற விழிகளையுடைய மகளிரின் காம மயக்கத்தால் மயங்கி நின்ற சிறியேன் அடியேன் மனம் கலங்குமாறு வந்துள்ள இக்கொடிய நோயை அடக்கமே பொருளாகக் கொண்ட தொண்டர்களின் மனத்தில் ஒளிர்ந்தோங்கும் ஞானப் பொருளாகியவனே,நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? பாடல் 10: துன்பத்தையே சுமையாய் சுமக்கின்ற நாயேனாகிய என்னை, வாட்டமே செய்து மயக்கத்தில் ஆழ்த்துகின்ற கொடிய நோயை, இன்பத்தையே அருள்கின்ற என் ஆருயிரே, என் அன்பே, நீ நீக்காவிட்டால் யாரால் நீக்கமுடியும்?? youtube: https://www.youtube.com/thiruvarutpa?... Face Book:   / siva.jeevakarunya.9   Telegram: https://t.me/thiruvarutpaTv ------------------------------------------------------------------------------------ DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ------------------------------------------------------------------------------------ #Vallalar #thiruvarutpa #VallalarSongs #திருவருட்பா    / @thiruvarutpa   thiruvarutpa tv, thiruvarutpa

Comments